தமிழறிஞர்கள் எழுதிய நூல்களை வேறொருவர் பெயரிலும், ஒரே நூலை வெவ்வேறு ஆசிரியர்/ பதிப்பகங்களின் பெயர்களிலும் வெளியிட்டு நூலக ஆணை பெற்றிருக்கும் மோசடி தற்போது அம்பலமாகியுள்ளது. நூல கத்துறையை பணமீட்டும் குறுக்கு வழியாக கருதும் சில பதிப்பாளர் கள் பொது நூலகத்துறையின் அதி காரிகளை உடந்தையாக்கிக்கொண்டே இந்த மோசடியைச் செய்திருக்க முடியும். கடைசி பத்தாண்டுகளில் பெரு மளவில் நடந்துள்ளதாக தெரியவரும் இதுபோன்ற மோசடிகளால் நூல கங்கள் குப்பைக்கிடங்கின் நிலைக்கு தரமிறக்கப்பட்டுள்ளன. இதேநிலை தொடருமாயின், நூலகத்தின் மீதான நம்பகம் பாதிக்கப்படுவதுடன் வாசகர்களின் ஆர்வமும் குன்றிப்போ கும் கெடுநிலை வரக்கூடும். நூல கத்துறையை உள்ளிருந்து அரித்துத் தின்னும் இந்தக் கரையான்களுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
நூலக ஆணைக்காக ஒதுக்கப் படும் நிதியை குறிப்பிட்ட சில பதிப்ப கங்கள் குறுக்கு வழியில் நூலக ஆணை பெற்று அபகரித்துவிடுகின் றன என்கிற குற்றச்சாட்டு நீடிக்கிறது. இந்நிலையில் இப்போது இம்மா திரியான புதுவகை மோசடியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொது நூலகத்துறை ஆண்டுதோறும் வெளி யாகக் கூடிய புதிய நூல்களை குறிப் பிட்ட காலவரையறைக்குள் மிகுந்த வெளிப்படைத் தன்மையுடனும் பார பட்சமற்றும் தெரிவுசெய்து நூலக ஆணை வழங்க வேண்டும் என்று எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் எழுப்பிவரும் கோரிக்கையுடன் தமுஎகச ஒன்றுபடுகிறது.
பொருளாதார நிலை, அணுகும் வாய்ப்பு உள்ளிட்ட பல காரணங் களால் சொந்தமாக நூல்களை வாங்கிக் கொள்ள முடியாத மாணவர்கள், ஆய்வாளர்கள், படிப்பாளிகள் என பலரும் மேலதிகத் தேவைகளுக்காக நூலகங்களையே பெரிதும் சார்ந்துள் ளனர். இத்தேவையை நிறைவு செய்யும்விதமாக அரசு நூலகங்களும் தனியார் நூலகங்களும் பெரும்பங் காற்றும் தனித்துவத்தைக்கொண்ட தமிழ்நாட்டின் நூலகக் கட்டமைப்பி னை ஊழலும் பாரபட்சமும் அற்றதாக வலுப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து...