ஓய்வூதியர்களின் நீண்ட காலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே தலைவர் எம். வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் அன்பழகன், மாவட்ட நிர்வாகிகள் நீதிமாணிக்கம், எ.நடராசன், ஆர். கஜேந்திரன், எம்.சந்திரசேகரன், வீரமுத்து, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.