சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளை (ஏப்.14) தமிழ் வருடப் பிறப்பு, ஏப்ரல் 15 புனித வெள்ளியை தொடர்ந்து சனிக்கிழமையும் (ஏப்.16) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து கூடுதலாக 1,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
சென்னைக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக பிற ஊர்களில் இருந்து ஏப்.17ஆம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.