tamilnadu

img

சுய உதவிக்குழு பெண்களிடம் தவணை கேட்டு தனியார் நிதி நிறுவனங்கள் மிரட்டல்

விழுப்புரம், ஜூன் 5- சுய உதவிக்குழு பெண்களிடம் தவணைத் தொகையை கேட்டு மிரட்டும் தனியார் நிதி நிறுவனங்கள்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்த னர். தமிழ்நாடு முழுவதும் பெண்க ளின் முன்னேற்றம் என்ற வகையில்  அரசு பெண்கள் சுய உதவி குழுக்  களை ஆரம்பித்தது. அவர்களுக்கு  வழிகாட்டியாக சமூக நலத்துறையின்  கீழ் மகளிர் திட்டம் என்ற ஒரு பிரிவை  ஏற்படுத்தி அந்தந்த மாவட்டங்களில்  இதற்கான அலுவலகளை அமைத் தது. இந்தக்குழுக்களை கண்காணித்து  அவர்களுக்கு சுய தொழில் உதவிக்  கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்  வேறு கடன் திட்டங் களை அரசு மானியத்துடன் வழங்கி வந்தது.

இந்நிலையில் தான் சுய உதவி  குழுக்கள் தமிழகத்தில் அரசியலில்  வெற்றி தோல்விகளை நிர்ணயம்  செய்யும் ஒரு சக்தி என நம்பிய வர்கள் சுய உதவிக் குழுக்களை மாறி மாறி பாகுபாடு இன்றி இழுத்தால்  தற்போது சுய உதவி குழுக்கள்  தடுமாறி வருகிறது, இந்நிலையில் தான் அரசுகளால் கண்டும் காணா மல் விடப்பட்ட இந்த சுய உதவிக் குழு பெண்களை குறிவைத்து தனி யார் கடன் வழங்கும் நிறுவனங்க ளான (மைக்ரோ பைனான்ஸ்) ஈகு விடாஸ், கிராமசக்தி, முத்தூட் போன்ற  பல்வேறு நிறுவனங்கள் கிராமப் புறங்களில் பெண்களை மீண்டும் ஒரு குழுவாக உருவாக்கி வாரம், 15  நாள், 1 மாதம் என செலுத்தக் கூடிய  காலத்திற்கு ஏற்றவாறு ரூ.10 ஆயிரம்  முதல் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கு கின்றன. இதில் ஒரு பெண் எத்தனை  தனியார் நிறுவன குழுக்களில்  வேண்டுமானாலும் இணைந்து இருக்கலாம். அந்தந்த தனியார்  கடன் நிறுவனங்களும் ஒரே குழு விற்கு அல்லது பல குழுக்க ளில் உறுப்பினராக உள்ளவர்க ளுக்கும் கடன் வழங்குகிறது.

குறிப்பிட்ட தேதியில் அந்தக் குழுவில் உள்ள அனைத்து உறுப்பி னர்களும் தவணை தொகையை செலுத்த வேண்டும். யாராவது ஒருவர்  பணம் செலுத்தவில்லை என்றாலும்,  அந்தக் குழுவில் உள்ள மற்ற உறுப்பி னர்கள் பொறுப்பேற்று பணம் செலுத்த வேண்டும். இந்த மாதிரி  மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங் களை சிலர் அரசியல்வாதிகளின் பின்புலத்தோடு நடத்துவதால் மாறி மாறி ஆளும் அரசுகள் கண்டும் காணா மல் விட்டு விடுகிறது, அதனால் இது  போன்ற தனியார் கடன் நிறுவனங்கள் கொடிகட்டி பறக்கிறது. இதுபோன்ற நிறுவங்களில் கிராமபுற ஏழை எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த  பெண்களே அதிக அளவில் உறுப்பி னர்களாக உள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் பெண்கள் வேலையிழந்து வாழ்வா தாரத்தை இழந்துள்ளனர். இந்தச்  சூழலில் விழுப்புரம் பானாம்பட்டு  மின்வாரிய காலனி பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவி னர் அதன் தலைவி நாகலட்சுமி தலை மையில் மாவட்ட ஆட்சியர் அண்ணா துரையிடம் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில், குழுவில் உள்ள பெண்கள் அன்றாடம் கூலி  வேலை செய்து பிழைப்பு நடத்துகி றோம். கொரோனா தொற்று பர வாமல் தடுக்க அரசு பிறப்பித்த பொது முடக்க உத்தரவை மதித்து நாங்கள்  அனைவரும் வீட்டிலேயே இருந்தோம். இதனால் வேலைக்கு செல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். சகஜ வாழ்க்கைக்கு  நாங்கள் திரும்பி வேலைக்கு சென்றால்தான் தனியார் நிறுவனங்க ளில் வாங்கிய கடன்களை செலுத்த முடியும். இதற்கு குறைந்தது 6 மாத காலம் அவகாசம் தேவைப்படும். இந்தச் சூழலில் நாங்கள் வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையை கேட்டு தனியார் நிறு வனத்தினர் மிரட்டுகின்றனர். எனவே, தனியார் நிதிநிறு வனங்கள் 6 மாத காலம் கட னுக்கான வட்டித் தொகையை கேட்டு மிரட்டாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி யுள்ளனர். மனுவை பெற்ற ஆட்சியர் அண்ணாதுரை இதுகுறித்து பரி சீலனை செய்து நடவடிக்கை எடுப்ப தாக தெரிவித்துள்ளார். பெண்கள் குழுக்களுக்கு கடன்  வழங்கியுள்ள தனியார் நிதி நிறுவ னங்களை அழைத்து பேசி தவணை கட்டுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது போன்ற நிறுவனங்களில் குழுவாக கடன் பெற்று சிக்கி உள்ள பெண்களை கட னில் இருந்து மீட்டு அரசு வங்கிகள்  மூலம் கடன் வழங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.