tamilnadu

img

வெள்ளி கடற்கரையில் ரூ. 4.98 கோடியில் மேம்படுத்தப்பட்ட பூங்கா திறப்பு

வெள்ளி கடற்கரையில் ரூ. 4.98 கோடியில்  மேம்படுத்தப்பட்ட பூங்கா திறப்பு

கடலூர், மே 29 -  தேவனாம்பட்டினத்தில் வெள்ளி கடற்கரையில் ரூ. 4.98 கோடியில் மேம்படுத்தப்பட்ட பூங்கா உள்ளிட்ட பகுதி களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயி லாக திறந்து வைத்தார். கடலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கடற்கரை பகுதிகளில் ஒன்றான தேவ னாம்பட்டினம் வெள்ளி கடற்கரை ஆசியா வின் மிக நீளமான கடற்கரையில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கடற்கரை பகுதி யில் சுற்றுலா பயணிகளை மேலும் கவர்ந்திழுக்கும் வகையில் அதிநவீன பொழுதுபோக்கு மின் சாதனங்கள் அமைத்தல், அழகிய வேலைபாடுகளுடன் கூடிய பூங்கா, செயற்கை நீரூற்றுகள், ஓய்வெடுக்கும் பகுதி, குழந்தைகள் விளை யாட்டு பகுதி, உடற்பயிற்சி மையம், நடை பாதை அலங்கார விளக்குகள், திறந்த வெளி திரையரங்கம் ஆகியவற்றை அமைத்து தலைசிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றும் பணிகள் மூலதன மானிய திட்ட நிதி 2023-2024 கீழ் ரூ.4.98 கோடியில் நடைபெற்று முடிவடைந்தது. இதையடுத்து, வியாழக்கிழமை (மே 29) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக பூங்கா உள்ளிட்ட பகுதிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி ஆணையர் அனு, திமுக நகர செயலாளர் கே.எஸ். ராஜா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று பூங்கா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை பார்வையிட்டனர். இதேபோல் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களை யும் காணொலி காட்சி வாயிலாக திறக்கப் பட்டது.