சென்னை,பிப். 23- சென்னை பெருநகர கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் 19ஆம் ஆண்டுப் பேரவை எம்.கே.பி நகர் விபிசி இல்லத்தில் ஞாயி றன்று (பிப்.23) நடை பெற்றது. பெரம்பூர் பகுதித் தலை வர் பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஜே.டேவிட் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் பி.லூர்துசாமி, நிர்வாகிகள் சீனிவாசன், சி.மார்டின், எம்.ராஜ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பகுதிச் செயலாளர் ஏ.தமீம் ஆண்டு அறிக்கையையும், பி.சூசை மைக்கேல் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித் தனர்.
புதிய நிர்வாகிகள்:
பகுதித் தலைவராக பி.வெங்கடேசன், செயலாள ராக ஏ.தமீம், பொருளாளராக எம்.சி.பென்சிலய்யா கட்டுமான தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.22ஆயிரம் வழங்க வேண்டும், மாநில அரசுசட்டமன்றத்தில் ஒப்புக்கொண்ட சலுகை களை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு தேர்வில் நல்லமதிப்பெண் எடுத்த சங்க உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.