சென்னை, ஏப்.1- காப்பகங்களில் வசிக் கும் முதியோர், மாற்றுத்திற னாளிகள் வாக்களிப்பதை யும் உறுதி செய்ய வேண்டும் என்று மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தமிழ் நாடு அனைத்து வகை மாற் றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ. வில்சன், மாநி லப் பொதுச்செயலாளர் பா. ஜான்சிராணி ஆகியோர் அனுப்பியுள்ள அந்த கடி தத்தில் குறிப்பிடப்பட்டி ருப்பதாவது:
தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் தொண்டு நிறுவ னங்கள் நடத்தும் முதியோர் & மாற்றுத் திறனாளிகளுக் கான காப்பகங்கள் செயல் பாடுவதாக தகவல்கள் உள் ளன. இவைகளில் 2 லட்சத் திற்கும் மேற்பட்டவர்கள் வசிப்பதாக தெரிகிறது. பலர் தங்களின் நிரந்தர வசிப்பிட நாடாளுமன்ற தொகுதிக்கும் வெகுதொலைவில் உள்ள காப்பகங்களில் விடப்பட் டுள்ளதாகத் தெரிகிறது.
மாநிலம் முழுவதும் உரிய அங்கீகாரம் இல்லா மல் நூற்றுக்கணக்கான காப் பகங்கள் உள்ளதால், இவை களில் விடப்பட்டுள்ள வாக் காளர்களின் முழுமையான விபரம் மாவட்ட நிர்வாகங் களிடம் இருப்பதாக தெரிய வில்லை. அதேவேளையில், இந்தக் காப்பகங்களில் விடப்பட்டுள்ள தகுதியான முதியோர், மாற்றுத்திற னாளிகளும் நாட்டின் குடி மக்கள் என்ற அடிப்படை யில், அவர்கள் வாக்களிக்க வசதி செய்து தரவேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணை யத்திற்கு உள்ளது.
2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போது சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநலக் காப்ப கத்தில் தங்கியுள்ள நிரந்தர நோயாளி வாக்காளர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது, அனைத்து தரப்பினரின் பாராட்டை பெற்றது.
அஞ்சலில் வாக்களிக்க வசதி
அதேபோல 2024 நாடா ளுமன்றத் தேர்தலிலும் தமிழ் நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்றும், பெறாமலும் இயங் கும் தனியார் காப்பகங்களில் விடப்பட்டுள்ள முதியோர், மாற்றுத்திறன் வாக்காளர் கள் தங்களது ஜனநாயக கட மையை நிறைவேற்றும் வகையில், நேரிலோ, அஞ் சல் மூலமாகவோ வாக்க ளிக்க உரிய நடவடிக்கை களை தேர்தல் ஆணையம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.