சென்னை,அக். 17 "கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாவது அகழ்வாராய்ச்சித் திட்டத்தைப் பார்வையிட பொது மக்களை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும்" என்று பிரபல ஸ்தபதி முனைவர் கே. தட்சிணாமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில்"ஐந்தாம் அகழ்வாராய்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்கள் பார்வையிட இயலாது என்று அரசு அறிவித்துள்ளது. அப்படியானால் அந்தப் பணிகள் அனைத்தும் மூடப்படுமோ என்ற ஐயமும் பொதுமக்களுக்கு ஏற்பட்டு ள்ளது. பணிகள் முடிவடைந்து விட்டா லும் கூட, ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழர்களின் தொன்மையைப் புரிந்து கொள்ளும் வகையில் இதனைப் பார்வையிட அரசு தொடர்ந்து அனுமதிக்க வேண்டும். மேலும் கடந்த நான்கு அகழ்வாராய்ச்சித் திட்டப் பணிகளும் மூடப்பட்டுவிட்டமையால் ஐந்தாவது அகழ்வாராய்ச்சித் திட்டப் பணியில் கிடைத்த தரவுகளை (Data) ஒப்பிட்டுப் பார்க்க இயலாமல் போய்விட்டது. தற்போது ஆறாவது அகழ்வாராய்ச்சித் திட்டப் பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலை யில் ஐந்தாவது அகழ்வாராய்ச்சித் திட்டப் பணிகள் மூடப்பட்டால் அதில் கிடைத்த தரவுகளையும் ஒப்பீடு செய்ய இயலாமல் போய்விடும். மேலும் பண்டைய கால தமிழ் எழுத்துக்கள், எண்கள், கட்டிட நாகரீகம் போன்றவற்றை நம்முடைய ஆராய்ச்சி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும் என்றும் அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.