திருப்பூர், ஜூலை 14 – திருப்பூர் பல்லடம் சாலை தெற்கு உழவர் சந்தை அருகில் சாலையோர பழ வியாபாரி கள் அதிகாலை நேரம் வியாபாரம் செய்வ தற்கு அனுமதிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தி னர் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்த னர். திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபா ரிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலன் தலைமையில் சாலையோர வியாபாரிகள் கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது: இந்த சங்கத்தைச் சேர்ந்த உறுப் பினர்கள் திருப்பூர் மாநகராட்சி உட்பட மாவட் டம் முழுவதும் உள்ள பகுதிகளில் சாலையோ ரம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லா மல் தள்ளுவண்டிகளில் பழம் வியாபாரம் செய்து வருகின்றனர். அதேபோல் திருப்பூர் பல்லடம் சாலை யில் தெற்கு உழவர் சந்தை அருகில் 100 மீட்டர் தொலைவில் சாலையோரம் பழங் களை வைத்து தினசரி காலை 4 மணி முதல் 8 மணி வரை வியாபாரம் செய்தனர். இதில் கிடைக்கும் வருமானத்தில்தான் அந்த சாலை யோர வியாபாரிகள் குடும்பத்தினர் ஜீவனம் செய்து வருகின்றனர். மேலும் இப்பகுதி யில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவ தில்லை, பொது மக்களுக்கும் பாதிப் பில்லை. ஆனால் கடந்த ஜூன் 26ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தும், கோட் டாட்சியர் அலுவலகத்தில் இருந்தும் அரசு அதிகாரிகள் சாலையோர வியாபாரிகளிடம் மேற்கண்ட இடத்தில் வியாபாரம் செய்யக் கூடாது என்றும், இதனால் உழவர் சந்தை வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி யுள்ளனர். உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள சில தனியார் கடை உரி மையாளர்கள் தங்கள் கடை காலை 9 மணிக்கு மேல் திறக்கப்படும் நிலையில், அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை கடை வாசலில் சாலையோர வியாபாரம் செய்ய அனுமதிப்ப தாக கூறியுள்ளனர். சாலையில் இருந்து 5 அடி தூரம் உள்ளே தள்ளி போக்குவரத் துக்கும், பொது மக்களுக்கும் எந்த பாதிப் பும் இல்லாமல் வியாபாரம் செய்தவர்களை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி உள் ளது. இதனால் சிறு சாலையோர வியாபாரி கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படு கிறது. இது குறித்து கோட்டாட்சியர் உரிய முறையில் நடவடிக்கை எடுத்து சாலை யோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதுகாத் திட வேண்டும் என்று சிஐடியு கேட்டுக் கொண் டுள்ளது.