இந்து அறநிலையத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் மாநில காப்பாளர் தேவராஜன் தலைமையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் வியாழனன்று (ஜன. 9) சந்தித்து பேசினர். இதில் மாநில பொதுச் செயலாளர் முத்துசாமி, மாநிலத் தலைவர்களில் ஒருவரான மதுரை முருகேசன், மாநிலப் பொருளாளர் பக்கிரிசாமி சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.தனசேகர், கோட்டச் செயலாளர் இரா.ரமேஷ், கோட்ட பொருளாளர் குகன் ஆகியோர் உள்ளனர். இறுதியாக தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளதாக சங்க நிர்வாகிகள் கூறினர்.