சென்னை,டிச.9- தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 71,145 மின்மாற்றிகள் மாற்றி அமைக்கப் பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரி வித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பிய அதிமுக உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார், மதுரை திருமங்கலத்தில் மின்கம்பங்கள் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 3 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 11,509 ஓவர் லோடு மின்மாற்றிகள் கணக்கெடுக்கப்பட்டு 8,105 லோ வோல்டேஜ் மின் மாற்றிகள் கணக்கெடுக்கப்பட்டு முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக 51,532 மின்மாற்றிகள் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 3 ஆண்டு களில் 71,145 மின்மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.