tamilnadu

ஆன்மிக சுற்றுப்பயணம் வந்த இஸ்லாமியரை விடுத்திடுக

கி.வீரமணி வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 10- இந்தியாவுக்கு “ஆன்மிகச் சுற்றுப்பய ணம்” வந்த இஸ்லாமியர்கள் 129 பேர்களை  புழல் சிறையிலிருந்து விடுத்து, அவரவர்தம் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு தமிழ்நாடு அரசையும், மத்திய அரசையும் திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி வலி யுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு: வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு "ஆன்மிகச் சுற்றுப்பயணம்" வந்த வெளி நாடுகளைச் சேர்ந்த 129 பேர்கள் (இதில் பெண்கள் 12)  'விசா' விதி மீறல் என்ற  அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப் பட்டு சென்னைப் புழல் சிறையில் வைக்கப் பட்டுள்ளனர். மத்திய அரசின் விதி முறைகள் - உயர்நீதி மன்ற வழிகாட்டுதல்கள் என்னாயிற்று? இத்த கையவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் தெளி வாக இருக்கின்றன. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் தேவையான ஆணை யைப் பிறப்பித்துள்ளது.

ஆனால் தமிழ்நாடு அரசோ இவை எதனை யும் பொருட்படுத்தாமல் புழல் சிறையில் வைத்திருப்பது விதி மீறல் மட்டுமல்ல மனித நேயத்துக்கும் விரோதமானதாகும். பிற மாநி லங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் கிடை யாது. வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள் தனியான இடங்களில் வைத்துத்தான் பரா மரிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு அரசு வெளிநாட்டுக்காரர்களை ஏனிப்படி ‘தண்டிக்கிறது’ என்று தெரிய வில்லை. ‘விசா’ மீறல் என்று எடுத்துக் கொண்  டாலும் அதற்குரிய தண்டனையை அவர்கள் அனுபவித்து விட்டநிலையில் அவர்களைத் தத்தம் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க  வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக புழல் சிறை யில் அவதிப்படும் வெளிநாட்டு மக்களை அங்கிருந்து விடுவித்து, சிறுபான்மை மக்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தங்க  வைக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுப்படி, புழல் சிறையில் வாடும் 129 வெளிநாட்டு இஸ்லாமி யர்கள்மீதான வழக்கை முடித்து வைத்து அவ ரவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி  வைக்குமாறு மத்திய - மாநில அரசுகளை  வலியுறுத்துகிறோம். இதில் வெளிநாட்டு அரசு களின் மனக்கசப்பைத் தேவையில்லாமல் சம்பாதித்துக் கொள்ள வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.