இரண்டும் பெண் குழந்தை கள். மன வளர்ச்சி இல்லாத வர்கள். 29 வயது இளம் தாய்க்கோ காசநோய் (டி.பி). அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டிய தந்தையோ கட்டுமான தொழிலாளியாய் திருப்பூரில் வாழ்க்கைக்கு வழி தேடி போரா டும் அவல நிலை. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றி யத்தில் உள்ள வ.சின்னகுப்பத் தில்தான் இப்படியான குடும் பங்கள் பல உள்ளன. 9 வயது பிரியதர்ஷினி, 5 வயது யாழினி ஆகிய இரண்டு மன வளர்ச்சி குன்றிய (எம்.ஆர்) பெண் குழந்தைகளின் தாயான தேன்மொழிக்கு சில வருடங்களாக காசநோய் வியாதி வந்து வாட்டி வதைக்கிறது. இதற்கிடையில் இவர் களைப் பாதுகாப்பதற்காக கட்டு மான தொழிலில் ஈடுபட்டுவரும் தேன்மொழியின் கணவர் சிவக்கு மாரோ மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறார். தேன்மொழியின் தாயார் குழந்தைகளையும், மக ளையும் பாதுகாக்க உடன் இருந்து போராடி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லர் ஆகியோரிடம் உதவித்தொகை கோரி மனு அளித்துள்ளனர். ஆனால் முன்னுரிமை அளித்து உத வித் தொகை அளிக்க வேண்டிய இவர்களுக்கு தற்போதுவரை கிடைக்கவில்லை. இந்தமாத துவக்கத்தில்தான் காசநோய்க்கான உதவித்தொகை தேன்மொழிக்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. தன்னுடைய சிறிய ஓட்டு வீட்டின் மேலே ஒழுகாமல் இருக்க தார்ப்பாய் போட்டிருக்கும் நிலையில் தினசரி வாழ்க்கையை சமாளிப்பதற்கு மிகப்பெரிய சிரமங்களை சந்திக்கிறார் இளம் தாயான தேன்மொழி. “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வளர்ச்சி நிதி வசூலுக்காக கடந்த மாதம் வீடுவீடாக செல்லும் போது ஒன்றியம் முழுவதும் இப்படிப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நிறைந்துள்ள ஏராளமான வீடுகளை நேரில் கண்டோம். இக்கிராமத்தில் வசிக்கும் கனகசபை - செல்வமணி ஆகியோரின் 23 வயதான கதி ரேசன் மன வளர்ச்சியற்ற நிலையில் அரசின் உதவி ஏதும் கிடைக்காத நிலையில் உள்ளார். இது போன்ற மாற்றுத்திறனாளிகள் நிறைந்து இருக்கக்கூடிய கிராமங்களாக வண் டிப்பாளையம், சின்னக்குப்பம், பெரியக்குப்பம் என ஒன்றியம் முழுவதும் பல கிராமங்கள் உள்ளன. மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் மாற்றுத்திறனாளிகளின் நல் வாழ்க்கைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநாவலூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயக்குமார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் எம்.ஆறு முகம், “இப்படி மன வளர்ச்சி இல்லாத மற்றும் குன்றிய மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை கேட்டு கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக துறைரீதியான நட வடிக்கை எடுத்து உதவித்தொகை வழங்க வேண்டும். இது தொடர் பாக அரசுத்துறை அதிகாரிகளுக்கு பல விவரங்கள் தெரியாமலேயே உள்ளன என்பது வேதனையானது. மனநிலை குன்றிய குழந்தை களுக்கு ஆவணங்களில் கையெ ழுத்து வைப்பது, ஆதார் அட்டைக்கு கருவிழி ஸ்கேன் செய்வது மிகுந்த சிரமம். ஆனால் இவையெல்லாம் இருந்தால்தான் உதவித்தொகை கொடுக்க பரிந்துரைக்க இயலும் என்று நடைமுறைக்கு புறம்பாக பேசும் உயரதிகாரிகளும் உள்ள னர். இந்த நடைமுறைகளை மாற்ற வேண்டுமென மாற்றுத்திறனாளி கள் அமைப்பு போராடி வரு கிறது”என்றார். அம்மாவின் அரசு அம்மாவின் அரசு என மூச்சுக்கு முன்னூறு முறை கூறும் தமிழக அரசின் சமூக நலத் துறை; கிராமங்கள் தோறும் அதி கரித்துவரும் மாற்றுத்திறனாளி களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும், பிப்ரவரி24 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாது காப்பு தினமாக அறிவித்தால் மட்டும் போதாது. பிரியதர்ஷினி, யாழினி போன்ற ஏராளமான மாற்றுத்திற னாளி குழந்தைகளை பாதுகாக்கக் கூடிய வகையில் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. -வி.சாமிநாதன்