சென்னை, மார்ச் 6- பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வில் விடுபட்ட மாணவர் களுக்கு மறு தேர்வு நடத்து வதற்கான ஏற்பாடுகளை தமி ழக அரசு செய்திட வேண்டும் என்று இந்திய மாணவர் சங் கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ. சம் சீர் அகமது, மாநிலச் செயலா ளர் கோ. அரவிந்தசாமி ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 7.74 லட்சம் மாணவர் கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இருந்த நிலை யில், மொழிப் பாடத் தேர்வில் 12 ஆயிரத்து 364 மாணவர் களும், ஆங்கிலப் பாடத் தேர் வில் 12 ஆயிரத்து 696 மாண வர்களும் பங்கேற்கவில்லை (ஆப்சென்ட்) என தேர்வுத் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகின. அதேபோல் 11-ஆம் வகுப்பு பொதுத் தேர் வில் 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய நிலையில், மொழிப் பாடத்தில் 9,844 மாணவர்கள் பங்கேற்கவில்லை என அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.
தேர்வுகளில் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்கா மல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக 11-ஆம் வகுப்பு தேர்வை 4 லட்சத்து 31 ஆயி ரம் மாணவர்கள் எழுதும் நிலையில், அவர்களின் வருகை குறித்தும் அரசு கவ னம் செலுத்த வேண்டும்
. தேர்வில் பங்கேற்காததற் கான காரணத்தை சம்பந்தப் பட்ட மாணவ - மாணவியரின் வீடுகளுக்கே சென்று கண்டறி வதுடன், எந்தப் பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் பின்தங்கியுள்ளனர் என்பதை நகர் மற்றும் கிரா மப்புறம் வாரியான புள்ளி விவ ரத்துடன் வெளியிட்டு தமிழ் நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும், விடுபட்ட மாண வர்களுக்கு உடனடியாக மறு தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.