கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அனுரத்னா முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.மதன், செயலாளர் எஸ். தேவா, பகுதி நிர்வாகிகள் ப.லோகநாதன், முனிரத்தினம், வெங்கட்டாதிரி, ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.