ராணிப்பேட்டைவிவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாயத்துக்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சனிக்கிழமை (ஜூன் 28) மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி துவக்கிவைத்து பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி த.வி.ச மாவட்ட தலைவர் எல்.சி. மணி, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், வி.தொ.ச மாவட்ட தலைவர் டி. சந்திரன், சிபிஎம் மாவட்ட குழு எஸ். செல்வம், ஆற்காடு வட்டார செயலாளர்கள் ஜி. மதியழகன், வாலாஜா வட்டார செயலாளர் ஆர். மணிகண்டன், த.வி.ச.மாவட்ட குழு நிலவு குப்புசாமி உள்ளிட்ட ஏராளமானார் கலந்து கொண்டனர்.