tamilnadu

இனச்சான்று கேட்டு ஜூன் 30 கோட்டை நோக்கி பேரணி

இனச்சான்று கேட்டு ஜூன் 30 கோட்டை நோக்கி பேரணி

மலைவாழ் மக்கள் சங்கம் முடிவு

திருவள்ளூர், மே 24- பழங்குடியின மக்களுக்கு இனச் சான்றிதழ் வழங்கிடும் அரசாணை 104ஐ விரைந்து அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ஜூன் 30-ஆம் தேதி சென்னை கோட்டையை நோக்கி,  மாபெரும் பேரணியை நடத்திட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. சங்கத்தின் மாநில குழு கூட்டம் சனிக்கிழமை (மே 24), திருவள்ளூர் மாவட்டம்,  திருத்தணியில்  சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு தலை மையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன்,  பொருளாளர் ஏ.பொன்னுசாமி, மாநில துணைத்தலைவர்கள் ஏ.வி.சண்முகம்,  ஆர்.தமிழ்அரசு, மாநில துணைச் செயலாளர்கள் இ.கங்காதுரை, பிரகாஷ்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை, வேலூர், திரு வள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், சேலம்,  ஈரோடு, திருப்பத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாநில குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தீர்மானங்கள். தமிழ்நாடு அரசு பழங்குடி மக்க ளின் இனச் சான்றிதழ் வழங்குவதில் உள்ள பல்வேறு முரண்பாடுகளை களைய வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கடந்த 21-8- 2023 தேதி அன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வெளி யிடப்பட்ட அரசாணை 104 அமல்படுத்த வேண்டும்,  பெற்றோர்களுக்கு இனச் சான்றிதழ் இருப்பின் பெற்ற பிள்ளை களுக்கும் பழங்குடி இன சான்றை வழங்க வேண்டும், என்று உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பழங்குடி மக்களுக்கு இனச் சான்றிதழ் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் அரசாணை 104 உத்தரவினை மதுரை மாவட்ட ஆட்சியர்,  அரசின் ஆணையை அமல்படுத்திட முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து உள்ளார். அதே போல் திண்டுக்கல், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை, வேலூர் போன்ற மாவட்டங்களில் பழங்குடி மக்களுக்கான இனச் சான்றிதழ் வழங்கிடும் அரசாணை 104 அமல்படுத்த மறுக்கும் நிலை உள்ளதை அரசு கவனத்தில் கொண்டு, சான்றிதழ் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பல்லா யிரக்கணக்கான பழங்குடியின மாணவர்கள் சான்றிதழ் கிடைக்காத தால் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் இன்றி தவிக்கும் நிலையை போக்க விரைவில் இனச் சான்றிதழ் வழங்க வேண்டும். பழங்குடி மக்களின் இனச் சான்றிதழ் வழங்க மறுப்பது, அவர்களின் உரிமையை பறிப்பதோடு,  அரசியல் சாசனம் வழங்கியிருக்கக் கூடிய அனைத்து உரிமைகளையும் பறிப்பதாகும் இதனை தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மாவட்ட ஆட்சியர்கள், சார் ஆட்சியர்கள்,  வருவாய் கோட்டாட்சியர்கள்,  தமிழ்நாடு அரசின் அரசாணையை தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 30-ஆம் தேதியன்று சென்னை கோட்டையை நோக்கி ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடத்தப்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.