புதுச்சேரி, ஜூலை 2- துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு மோசமான நிர்வாகம், ஊழல், உள்ளிட்டவைகளு டன் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தன மான அணுகுமுறையும் கூட காரணமாக உள்ளது என்று தமிழக அரசையும், தமிழக மக்களையும் விமர்சனம் செய்து சமூக வலைதளத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறி யிருந்தார். தமிழர்களை கொச் சைப்படுத்தி வெளியிட்டு இருந்த ஆளுநரை கண்டித்து திங்களன்று தமிழக சட்டப் பேரவையில் இருந்து தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்வெளிநடப்பு செய்தனர். மேலும் கிரண்பேடி தமிழக மக்களை விமர்சனம் செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரை கண்டித்து தி.மு.க. புதுச் சேரி மாநில தெற்கு பிரிவு சார்பில் ஆளுநர் மாளிகை அருகே மாநில அமைப்பா ளர் சிவா எம்.எல்.ஏ., தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தீர்மானக்குழு செயலா ளர் முனைவர் சபாபதி மோகன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலாளர் ராஜாங்கம், மூத்த பிரதேசக்குழு உறுப்பி னர் தா.முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செய லாளர் தேவபொழிலன், மனித நேய மக்கள் கட்சி பஷீர்அகமது, திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீர மணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலை வர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்மக்களிடம் ஆளுநர் கிரண்பேடி பகிரங்க மன் னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.