tamilnadu

img

கடைகளில் பணிசெய்யும் பெண்களுக்கு இருக்கைகள் வழங்க வேண்டும் வடசென்னை உழைக்கும் பெண்கள் மாநாட்டில் தீர்மானம்

சென்னை,மே.11-கேரளா மாநிலத்தைப்போல் தமிழகதத்தில் கடைகளில் பணிசெய்யும் பெண் ஊழியர்களுக்கு இருக்கைகள் வழங்க வேண்டும் என உழைக்கும்பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்தியுள்ளது. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குவின் வடசென்னை மாவட்ட 9 வது மாநாடு தோழர் ஏ.பி.நினைவகத்தில் சனிக்கிழமையன்று (மே 11) நடைபெற்றது.மாநாட்டிற்கு வீட்டுவேலை செய்யும் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.எம்.கவுரிதேவி தலைமை தாங்கினார். அங்கன்வாடி சங்க மாவட்டச் செயலாளர் என்.நிர்மலா வரவேற்றார். மாவட்டச் செயலாளர் இரா.மணிமேகலை வேலைஅறிக்கையை சமர்பித்தார். மாநில அமைப்பாளர் டி.ஏ.லதா சிறப்புரையாற்றினார். சிஐடியு வடசென்னை மாவட்டத் துணைத் தலைவர் பி.என்.உண்ணி, உழைக்கும் பெண்கள் தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் டி.சாந்தி, ஏ.எஸ்தர் (ஆசிரியர் சங்கம்),எஸ்தர், டி.ரமணி,எம்.குட்டிராணி (செங்கொடி), எஸ்.குமாரி (கட்டுமானம் சங்கம்), எம்.ஜான்சி( அமைப்பு சாரா சங்கம்) உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கல்யாணி ரகுநாதன் நன்றி கூறினார். 

தீர்மானங்கள்

சமவேலைக்கு சமஊதியம் வழங்கவேண்டும், பணியிடங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும், மாதவிடாய் காலங்களில் மருத்துவ சிறப்பு விடுப்பு மற்றும் மனநலஆலோசனை வழங்க வேண்டும், பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும், நலவாரிய சலுகைகளை இரட்டிப்பாக்க வேண்டும், அமைப்புசாரா பெண் ஊழியர்களுக்கு 55 வயதில் பணிஓய்வு வழங்கி பென்சன் வழங்க வேண்டும், நெரிசல் நேரங்களில் பெண்களுக்கு கூடுதல் ரயில், பேருந்து சேவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

புதிய நிர்வாகிகள்

மாவட்ட அமைப்பாளராக ஆர்.மணிமேகலை உள்ளிட்ட 10 பேர் கொண்ட இணை கன்வீனர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.