tamilnadu

img

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தங்கக்காசு, பணம் கொடுத்ததாக புகார்...

சென்னை:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்குக்கு தங்கக் காசு மற்றும் ரூ.4 ஆயிரம் பணம் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு நவம்பர் 22 ஞாயிறன்று தேர்தல் நடைபெற்றது. நீதிபதி ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 

தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கி யுள்ளார். இந்த தேர்தலில் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் 1303 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 1050 பேர் மட்டுமே வாக்களித்தனர். பதிவான வாக்குகள் திங்களன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.இதற்கிடையே தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பணம் மற்றும் தங்க காசுகள் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது தொடர்பாக சினிமா தயாரிப்பாள ரும், இயக்குனரும் நடிகருமான பிரவீன் காந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் முறைகேடு செய்ய சிலர் திட்டமிட்டுள்ளனர். ஒரு கவரில் ரூ.4 ஆயிரம் பணம் வைத்து ஒருவர் கொடுத்துள்ளார். தங்க காசும் கொடுத்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் தேர்தல் நேர்மையாக நடைபெறுவதில் பாதிப்பு ஏற்படும். எனவே பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்றார். 
 

;