மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பில்லை
தமிழக முதல்வர் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிபட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் ஆகியோருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதேநேரம், தருமபுரி மாவட்டத்தில் தேர்ந் தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, பென்னா கரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன் ஆகியோர் இடம்பெறவில்லை. மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதாவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மாறாக, அதிமுக பிரமுகர்க ளான மாநில விவசாய பிரிவு செயலாளர் டி.ஆர்.அன்பழகன் மற்றும் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோருக்கு கூட்டத்தில் இருக்கைகள் ஒதுக் கப்பட்டு இருந்தது.
கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் மாவட்ட திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஆகி யோரை கலந்து கொள்ள அனுமதிக்காமல், ஆளுங்கட்சி பிரமுகர்களை மட்டும் வைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியது ஜனநாயக விரோத செயல் என்று பல்வேறு அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், அனைத்து திட்டப் பணிகளின் காண்ட்ராக்ட் உள்ளிட்ட விவகாரங்களில் முழு அதிகாரம் படைத்த ஆளும் கட்சிப் பிரமுகர்களை அனுமதிக்கவும், ஊழல் மற்றும் முறை கேட்டுக்கு வழிவகுக்கவும் இத்தகைய போக்கு இடமளிக்கும் என்றும் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
தருமபுரி, ஆக. 21- தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க வந்த தருமபுரி திமுக எம்.பி., டி.என்.வி.செந்தில் குமாரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் ஆய்வு, திட்டப்பணிகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவிற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வெள்ளியன்று தருமபுரிக்கு வருகை தந்தார். இவ்விழாவில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி கொரோனா நோய்த்தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தொழில் முனைவோர்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் ஆகியோ ருடன் கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆய்வு கூட் டத்தில் துறை அதிகாரிகள், தொழில் கூட் டமைப்பு பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உத விக்குழு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
அதேநேரம், இந்நிகழ்வில் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிக ளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு கொடுக்கவில்லை. இச்சூழலில், விவசா யிகளைப் பாதிக்கும் எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடவேண்டும். தமிழக அரசு அறிவித்து கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழக முதல்வரை சந்திக்க தரும புரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார். அப்போது 100 மீட்டர் தொலைவி லேயே தருமபுரி நகர காவல் ஆய்வா ளர் ரத்தினகுமார் மற்றும் உடனிருந்த காவல் துறையினர் அவரை தடுத்தி நிறுத்தினர். மேலும், காவல் ஆய்வா ளர் ரத்தினகுமார் கொரோனா பாதிக்க வில்லை என சான்றிதழ் வைத்துள்ளீர் களா என கேட்டுள்ளார். இதனால் செந்தில் குமாருக்கும், காவல் துறையி னருக்கும் இடையே கடும் வாக்குவா தம் ஏற்பட்டது. காவல்துறையின் இத்த கைய அராஜக போக்கை கண்டித்து செந்தில் குமார் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த காவல் துறையினர் நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் பாராமல் அவரை வலுக்கட்டாயமாக சாலையின் ஓரமாக இழுத்து சென்ற னர். அப்போது, மக்கள் பிரதநிதி மனு அளிக்கவிடாமல் தடுப்பது ஜனநாயக விரோத செயல் என திமுக செந்தில் குமார் எம்.பி., ஆவேசமாக தெரிவித் தார். இதனால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.