tamilnadu

img

வடமாநிலங்களுக்கு மேலும் 10 ரயில்கள் இயக்க அனுமதி...

சென்னை:
எழும்பூர், ராமேஸ்வரம், நாகர்கோவிலில் இருந்து வட மாநிலங்களுக்கு மேலும் 10 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.கொரோனா பாதிப்பின் காரணமாக ரெயில் சேவை முழுமையாக தொடங்கப் படவில்லை. சிறப்பு ரயில்களாக இயக்கப் படுகின்றன. பல்வேறு வழித்தடங்களில் தேவைக்கு ஏற்ப கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படுகிறது.இந்தநிலையில் தெற்கு ரயில்வே சார்பில் மேலும் 10 ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள் ளது. அதன் விவரம் வருமாறு:-சென்னை எழும்பூர்- ஜோத்பூர் வாராந்திர சூப்பர் பாஸ்ட் (எண்.06067/06068). கொச்சுவேலி-இந்தூர்- கொச்சுவேலி வாராந்திர சூப்பர் பாஸ்ட் (எண்.026046/ 026045)எர்ணாகுளம்- ஓகா- எர்ணாகுளம் வாரம் இருமுறை ஓடும் சிறப்பு ரயில் (எண்.06338/06337). ராமேஸ்வரம்-ஓகா- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்.06733/ 06734). நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.டி.- நாகர்கோவில் வாரம் இருமுறை (எண்.06352/06351)இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டது.

;