சென்னை,ஜன.27- அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ. 12,500 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. இதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டில் அனைவ ருக்கும் கல்வி திட்டம் மூலம், தொகுப் பூதியத்தில் பணிபுரியும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு ரூ. 10, 000 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
இதை உயர்த்தி வழங்குமாறு அரசுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் கோரிக்கை வைத் தார். அதை நன்கு பரிசீலித்த அரசு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் பணிபுரியும் 12,105 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதந்தோ றும் வழங்கப்படும் தொகுப்பூதியம் ரூ.10,000-ல் இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது.
இதன்மூலம் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசுக்கு வரும் தொடர் செலவினம் ரூ. 33.29 கோடிக்கும் நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தர விடப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களுக்கு ரூ. 9. 07 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. இதனால் பகுதிநேர ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.