tamilnadu

img

சென்னையில் டெங்கு, மலேரியா காய்ச்சல் மருத்துவமனைகளில் நிரப்பி வழியும் மக்கள்

சென்னையில் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகளால் நிரப்பி வழிகிறது. மழைநீர் வடிகால்வாய்களில் சாக்கடை நீர் மடைமாற்றம் செய்வதும் இதற்கு காரணம். சென்னை புளியந்தோப்பு ஆடுதொட்டி பேருந்து நிறுத்தத்தில் கழிவு நீர் தேங்கி நிற்கும் அவலம் நிலவுகிறது. இந்த சுகாதார சீர்கேட்டால் பயணிகள் மட்டுமன்றி அப்பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புவாசிகளும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர். கொட்டாங்குச்சி, ஆட்டுஉரல், சைக்கிள் டயர்களை தேடும் மாநகராட்சி அதிகாரிகள் இதுபோன்ற சுகாதார சீர்கேகளை கண்டுகொள்ளாதது ஏன்? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.