tamilnadu

ஜான்டூயி பள்ளி எஸ்எஸ்எல்சி தேர்வில் நூறு சதவீதம்

விழுப்புரம்.மே.4-விழுப்புரம் ஜான்டூயி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 219 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப் பள்ளியில் 470 மதிப் பெண்ணுக்கு மேல் 4 மாணவர்களும், 450க்கு மேல் 12 மாணவர்களும், 400க்கு மேல் 63 மாணவர்களும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.சாதனை படைத்த மாணவர்களைப் பள்ளி தாளாளர் வீரதாஸ், பாராட்டி கேடயம் வழங்கினார். பின், அவர் கூறுகையில், “இப்பள்ளியில் 11 ஆம் வகுப்பில் இலவசமாகப் படிக்கப் பள்ளி கட்டண சலுகை செய்யப்பட்டுள் ளது. இதில், 480-க்குமேல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நூறு விழுக்காடும், 470-க்குமேல் எடுத்தவர்களுக்கு 50 விழுக்காடாகும். 450க்கு மேல் எடுத்தவர்களுக்கு 25 விழுக்காடு கட்டண சலுகை அளிக்கப்படும். இதைப் பயன்படுத்திப் பெற் றோர்கள் தங்களது பிள்ளைகளை 11 ஆம் வகுப்பில் சேர்த்துப் பயனடையலாம்”என்றார்.