சென்னை, ஏப்.3- மக்களவை பொதுத் தேர்தல் ஏப் ரல் 19 அன்று துவங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடக்கிறது. மேலும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது.
இந்த நாட்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நடத் தவோ, வெளியிடவோ தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள் ளது.
குறிப்பாக முதல் கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19 அன்று காலை 7 மணி முதல் இறுதிக் கட்டத் தேர்தல் நடைபெறும் ஜூன் 1 ஆம் தேதி மாலை 6.30 மணி வரை இந்த கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது.
அதேபோல வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத் துக்கணிப்பு முடிவுகள், தேர்தல் ஆய்வுகள் தொடர்பான எந்த தக வல்களையும் ஊடகங்களில் வெளி யிடவும் தடை விதித்து தேர்தல்ஆணை யம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.