tamilnadu

img

தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பில்லை: சத்யப்பிரதா சாகு...

சென்னை:
தமிழகத்தில் முன்கூட்டியே சட்டப் பேரவை தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவு என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, “2021 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில் அதனை முன்கூட்டியே நடத்த வாய்ப்பு குறைவு” என்றார்.கொரோனா தொற்று காரணமாக ஒரு வாக்குச்சாவடியில் 1,000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும், தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் விதமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது 67 ஆயிரமாக இருக்கும் வாக்குச்சாவடி மையங்களை 95 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறிய சாகு, கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படவுள்ளதால், கூடுதல் மின்னணு இயந்திரங்கள் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படவுள்ளது என்றும் சத்யப் பிரதா சாகு தெரிவித்தார்.

;