tamilnadu

img

நிவர் புயல் பாதிப்பு: டிச.1 தமிழகத்தில் மத்தியக் குழு ஆய்வு...

சென்னை:
தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகளை டிசம்பர் 1ஆம் தேதி மத்தியக் குழு ஆய்வு செய்கிறது.

நிவர் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  பெரும் பொருட்சேதமும் சில உயிர் சேதமும்  ஏற்பட்டுள்ளது. நிவர புயலால் பாதிக்கப்பட்ட  கடலூர் பகுதிகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.  ‘நிவர்’ புயல் தாக்குதலில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதுடன் சேதமடைந்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் கூறியுள்ளார். 

இந்நிலையில் தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகளை டிசம்பர் 1ஆம் தேதி மத்தியக் குழு ஆய்வு செய்கிறது.மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் அசுதோஸ் அக்னிகோத்ரி தலைமையில் 7 அதிகாரிகள் கொண்ட குழு நவம்பர் 30 அன்று தமிழகம் வருகிறது. டிசம்பர்1 ஆம் தேதி நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கிறது. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் மத்திய குழு ஆய்வு நடத்துகிறது. மத்திய குழு அளிக்கும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்படும். 

;