tamilnadu

சீர்காழி நாகை மாவட்டம் செய்திகள்

மணல் கடத்தியவர் கைது


சீர்காழி, ஏப்.4-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் மணிநகரைச் சேர்ந்தவர் முகம்மது யாசின்(45). இவர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து வேன் மூலம் மணலை கடத்திக் கொண்டு தைக்கால் பகுதிக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார். இந்த தகவலறிந்த கொள்ளிடம் காவல் உதவி ஆய்வாளர்சுரேஷ் தலைமையில் காவலர்கள், தைக்கால் மெயின் ரோட்டில்சென்று கொண்டிருந்த வாகனத்தை மணலுடன் பறிமுதல் செய்து வேனை ஓட்டிச் சென்ற முகம்மதுயாசினை கைது செய்தனர்.


கண்காணிப்பு கேமரா பொருத்தம் 


சீர்காழி, ஏப்.4-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் கடைவீதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் ரூ.70 ஆயிரம்மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராதுவக்க விழா நடைபெற்றது. புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர்சந்திரா கண்காணிப்பு கேமராவை இயக்கி வைத்தார். கிராம முக்கியஸ்தர்கள் கென்னடி, தேக்கு தியாகராஜன், சங்கர், அருண், ராஜேஷ் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டதன் மூலம் மாதானம் பகுதியில் அடிக்கடி நடைபெறும் திருட்டுகளை தடுக்க முடியும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்


;