வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 2 வியாபாரிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க சென்ற நீதிபதியை மிரட்டிய காவல்துறையை கண்டித்து திருத்தணி நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கல்வி அலுவலருக்கு தொற்று...
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டார கல்வி அலுவலர் சி.முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை...
கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலைய தெருவை சேர்ந்த வினோத்குமார் (21), சதீஷ்குமார் (19) கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உதவி ஆட்சியருக்கு தொற்று...
கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சங்கீதா, உதவி ஆட்சியர் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.