சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா நாளை பதவியேற்க உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா கடந்த மே 24-ஆம் தேதி ஒய்வு பெற்றார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா நாளை பதவியேற்க உள்ளார்.
இவர் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.