tamilnadu

img

நீதிபதி கர்ணன் மீது புதிய வழக்கு: உயர்நீதிமன்றம் பரிந்துரை....

சென்னை:
நீதிபதிகளையும், அவர்களது குடும் பத்தினரையும் விமர்சித்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது வழக்குப்பதியக் கோரிய வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உயர்நீதிமன்ற தனி நீதிபதி பரிந்துரைத் துள்ளார்.சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் பணியாற்றிய ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோரை தகாத வார்த்தைகளால் விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை கோரியும், அவர் வெளியிட்டுள்ள வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, நீதிபதி கர்ணனின் செயல்பாடு பெண் களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்ததுடன், மறுஉத்தரவு வரும் வரை அவரின் பேச்சுகள் அடங்கிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிட்டனர்.இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது நவம்பர் 6 ஆம் தேதி அளிக் கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யக் கோரி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உயர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கை தொடர்ந்துள்ளது.அந்த வழக்கு நீதிபதி ரவீந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பார் கவுன்சில் தரப்பில் வழக்கறிஞர் பிரபாகரன், சந்திரசேகரன் ஆகியோர் ஆஜராகி, நீதிபதி கர்ணனை கைது செய்ய முடியாவிட்டாலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகும், அவரது வீடியோக்களை அப்லோட் செய்யும் நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இவ்விவகாரத்தில் பல வழக்கறிஞர்களும், அரசும் மவுனம் காப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் பிரபாவதி ஆஜராகி, இதே விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் தேவிகா என்பவர் அளித்த புகாரில், மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி ரவீந்திரன், இதே விவகாரம் தொடர்பான வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் இருப்பதால், அதனுடன் இணைத்து விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.

;