tamilnadu

img

மதச்சார்பின்மைக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்!

சென்னை, நவ. 27 - மதச்சார்பின்மைக்கான போராட்டத்தை வலுப் படுத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் என்.குண சேகரன் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் 11 வது ஆண்டு நிறுவன நாள் சென்னையில் கொண்டா டப்பட்டது. இந்த நிகழ்ச்சி யில் என்.குணசேகரன் பேசி யதன் சுருக்கம் வருமாறு:

கூட்டாட்சி கோட்பாட்டின் அடிப்படையில் ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்திய அர சியலமைப்பு சட்டம் வரை யறுத்துள்ளது. வலுவான ஒன்றிய அரசும், அதற்கு  சமமான, அதிக அதிகாரங் களை கொண்ட மாநில அரசு களும் இருக்க வேண்டும் என்பதுதான் அரசமைப்பு சட்டத்தை வடிவமைத்த சிற்பிகளின் லட்சியமாக இருந்தது. இதற்கு மாறாக ஒன்றிய அரசு செயல்படு கிறது; அவ்வப்போது அர சமைப்பு சட்ட நெருக்கடி களை ஏற்படுத்துகிறது.

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் அரசுகளுக்கு கடும் நெருக்கடிகளை ஒன்றிய அரசு கொடுத்து வருகிறது. எதிர்க்கட்சி மாநில அரசுகள் தோல்வியடைந்து வந்த நிலையில், தில்லியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி அரசு  அமைந்தது. இது இந்திய கூட்டாட்சிக்கு வெற்றி.

தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்த பிறகு ஒன்றிய அரசு ஏராளமான தடைகள், நெருக்கடிகளை கொடுத்தது. பிரதமர் மோடிக்கு ஆத்திரம் ஏற்படுத் தும் பெயர்களாக ஆம்  ஆத்மி, அரவிந்த கெஜ்ரி வால் என்பது மாறிவிட்டது. இதனையும் மீறி ஆம் ஆத்மி அரசு செயல்படுகிறது.

திமுக, இடதுசாரி அரசும் ஒன்றிய அரசை எதிர்த்து வலுவாக போராடி வரு கின்றன. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைகள் தகர்க்கப்பட்டு, நெருக்கடி யான காலகட்டத்தில், ‘இந்தியா’ அணி உருவாகி உள்ளது. இந்த அணி 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, மாற்று கொள்கை கொண்ட ஆட்சியை, கூட்டாட்சியை பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும். இந்தியா பல மதங்களை, குழுக்களை கொண்டது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் இந்தியாவில் உள்ளது என மண்டல் கமிஷன் குறிப்பிட்டுள்ளது. மணிப்பூர் உள்ளிட்ட நாடு முழுவதும் சிறுபான்மை யினர் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். எனவே, அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிற, உரிமைகளை உறுதி செய்கிற, மதச்சார் பின்மையை பாதுகாக்கிற ஆட்சி நாடாளுமன்றத் தேர்த லில் அமைய வேண்டும். மதச்சார்பின்மைக்கான போராட்டத்தை வலுப்ப டுத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீக ரன் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில், தயா நிதிமாறன் எம்.பி., து.ரவிக் குமார் எம்.பி., சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்எல்ஏ உள்ளிட்டு பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் பேசினர்.