tamilnadu

img

முரசொலி மாறன் 17ஆம் ஆண்டு நினைவு நாள்...

சென்னை:
திமுகவின் முன்னோடிகளில் ஒருவருமான முன் னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 17ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் அவருடைய சிலைக்கும், படத்துக்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கும்பகோணத்தில் திங்களன்று திமுக இளைஞரணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்ததும்,அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முரசொலிமாறன் படத்துக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நாகை மாவட்டம் திருக்குவளை கலைஞரின் இல்லத் தில் உள்ள முரசொலி மாறனின் திருஉருவச் சிலைக்கு நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கௌதமன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் உள்ள முரசொலி மாறன் உருவப்படத்துக்கு மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

;