சென்னை,பிப்.14- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவி யேற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற ப்பட்டார். அதேபோல, அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி யாக மாற்றப்பட்டார். பிறகு, பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப் ்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் முனீஸ்வர் நாத் பண்டாரியை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நிய மித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார். நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, சுதந்திர இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 32-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள் ளார். அவருக்கு திங்களன்று(பிப்.14) ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் நடந்த நிக ழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அரசு அதிகாரிகள், டிஜிபி சைலேந்தி ரபாபு உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி,துணைத் தலைவர் ஓ.பன்னீர் ்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ஒன்றிய - மாநில அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். தலை மை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி முனீஸ் வர்நாத் பண்டாரிக்கு ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், பேரவைத் தலைவர் மு. அப்பாவு உள்ளிட்டோர் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, கடந்த 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி ராஜஸ்தானில் பிறந்தவர். ராஜஸ்தான் அரசு வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறி ஞராகவும், அணுசக்தி துறையின் வழக்கறி ஞராகவும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ராஜஸ் ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி யேற்றார்.