tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து 500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே 500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெள்ளியன்று  (டிச.20)  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்  வரலட்சுமி மதுசூதனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், சிறுபான்மை மக்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் சண்முகம்,  மற்றும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை தலைவர் எம் .அப்துல் அஹத்  ஆகியோர் பேசினர்.