சென்னை,ஜன.27- தமிழ்நாட்டில் மேலும் 4,200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித் துள்ளார். ஆம்னி பேருந்துகள் கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு 90 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து கள் முன்பதிவுக்கு 5,000 சதுர அடி இடமே இருந்தது. ஆனால் கிளாம் பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு 7,000 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 300 பேருந்துகள் நிறுத்தும் அளவுக்கு கிளாம்பாக்கத்தில் இட வசதி செய்து தரப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணி களுக்கு கூடுதல் வசதிகள் செய்யப் பட்டுள்ளன. மார்ச் மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக தயாராகிவிடும்.
நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு கூடுத லாக 200 நடை பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. சோழிங்கநல்லூரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் சிரமமின்றி பயணிக்க தேவையான நடவடிக்கை களை போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது.
இந்நிலையில் திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், தமிழ்நாட்டில் மேலும் 4,200 பேருந்துகள் பயன் பாட்டுக்கு வர உள்ளது, கிளாம்பாக் கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி, கோயம்பேட்டிற்கு தொடர்ச்சியாக மாநகர பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் ஆட்டோக்களை முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடு களும் நடைபெற்று வருகின்றன என்றார்.