செய்யூர் அரசு கலைக் கல்லூரியில் அமைச்சர் ஆய்வு
மாணவர், வாலிபர் சங்கங்களின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு பின்னர் திறக்கப்படவுள்ள
செய்யூர், ேம 24- செங்கல்பட்டு மாவட்டம், செய்யூ ரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட உள்ள இடத்தினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் செய்யூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப் பின்தங்கிய வட்ட மாகவும் விவசாயம் நிறைந்த பகுதி யாகவும் கிராமங்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்து வருகிறது. செய்யூர் வட்டத்திற்குட்பட்ட கிரா மங்களில் இருந்து பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு உயர் கல்வி பயில செல்ல வேண்டுமென்றால் செங்கல்பட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கும் சென்னையில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் செல்ல வேண்டி உள்ளது. மேலும் நீண்ட தூரம் பயணம் செய்து கல்லூரிக்கு செல்வது மட்டு மில்லாமல் சென்னையில் விடுதியில் தங்கி பயிலும் நிலைமையும் உள்ளது. இப்பகுதியில் உள்ள மாணவர்க ளின் நலனை கருத்தில் கொண்டு செய்யூரை மையமாக வைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடனடியாக துவங்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இப்பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாததால் கிராமப்புற மாணவர்கள் பலருக்கு உயர்கல்வி என்பதே மறுக்கப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் தெரி வித்துவந்தனர். இது ஒரு புறம் இருக்க செங்கல்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மொத்தம் உள்ள 990 இடங்களுக்கு இந்த நடப்பு ஆண்டு மட்டும் 35 ஆயிரத்தி 600 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதல மைச்சர் செய்யூர் வட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது, செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை துவங்கப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் 270 மாணவ மாணவியர்கள் பயிலும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைக்க உள்ளார் இந்நிலையில், சனிக்கிழமை (மே 24) செய்யூரில் கல்லூரி செயல்பட இருக்கும் இடத்தினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உடனடி யாக அவ்விடத்தினை மேம்படுத்திட துரித நடவடிக்கை எடுக்குமாறு அறி வுறுத்தினார். மேலும் இக்கல்லூரி இடத்தினை சுத்தப்படுத்தி சீர்செய்து மாணவ, மாணவியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு அறி வுறுத்தினார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கல்லூரி வளா கத்திற்கு பேவர் பிளாக் கற்கள் மூலம் வழித்தடத்தினை உடனடி யாக அமைத்து தர வேண்டும் என்றும், கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை ஏற்படுத்தித் தருமாறு அறி வுறுத்தினார். பின்தங்கிய பகுதியில் அமையவுள்ள இக்கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிகாம், பி.பி.ஏ. பி.ஏ.ஹிஸ்டரி, உள்ளிட்ட பாடப்பிரிவுகள் செயல்பட உள்ளது. விரைவில் மாணவர் சேர்க்கை துவங்கவுள்ளது. இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் மு.பாபு, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் முனைவர்.மலர், வட்டாட்சியர் சரவணன். உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.