சென்னை, ஏப். 7- மாநில உரிமையை மீட்டெடுக்க பாஜக, அதிமுகவை தோற்கடியுங்கள், இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு வாக்கு கேட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராயபுரத்தில் சனிக்கிழமை (ஏப்.6) பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் பெருமையை எடுத்துக் கூறும் வகையில் இந்த தேர்தல் அமைய வேண்டும். 4200 கோடி ரூபாயில் வட சென்னையின் வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
திருவொற்றியூரில் செய்த பணிகள்
ரூ.150 கோடி மதிப்பீட்டில் நெட்டுக் குப்பம் முகத்துவாரம் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. கத்தி வாக்கத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் மார்க்கெட் மற்றும் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. ரிட் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் அரசு கலைக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. மணலி பக்கிங்காம் கால்வாய் இணைப்பு மேம்பாலம் மற்றும் ஜோதி நகர் சடையங்குப்பம் மேம்பாலப் பணிகள் நிறைவடைந் துள்ளன. ரூ.25 கோடி மதிப்பீட்டில் விம்கோ நகர் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நிறை வடைந்துள்ளன. இதுபோல் ஏராளமான பணிகள் நடைபெற்றுள்ளன.
வாக்குறுதிகள்
எண்ணூர் ரயில் நிலையம் முதல் சத்தியமூர்த்தி நகர் வரை கொசஸ் தலை ஆற்றை தூர்வாரி கான்கிரீட் சாலை அமைத்து மின் விளக்குகள் அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும். ரூ.1 கோடி மதிப்பீட்டில் கத்திவாக்கத்தில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டடப் பணிகள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் நெட்டுக்குப்பம் மற்றும் தாழங்குப்பம் கடற்கரை அருகே கட்டப்பட்டு வரும் வலை பின்னும் கூடத்திற்கான பணிகள் விரைந்து முடிக்கப்படும். கத்திவாக்கத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். திருவொற்றியூர் முதல் மாதவரம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும். ராமநாதபுரம் மற்றும் கார்கில் நகரில் ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் சமுதாய நலக் கூடங்கூடங்கள் விரை வில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பல்வேறு பகுதிகளில் பட்டா பிரச்சனை நிலவுகிறது. இந்த பகுதியில் பட்டா கிடைக்காதவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த பணிகள் தொடர்ந்து நடை பெற வேண்டும் என்றால் வேட்பாளர் கலாநிதி வீராசாமி வெற்றி பெற வேண்டும். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அதற்காக நாம் பாடுபட வேண்டும் என்றார்.