சென்னை, ஆக.10- சென்னை திருவொற்றி யூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையம் அருகே மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடை பெற்று வருகின்றன. பட்டினப்பாக்கத்திலிருந்து திருவெற்றியூர் சுங்கச்சா வடிக்கு செல்லும் 32ஏ மாநகர பேருந்து, சுங்கச்சாவடி அருகே திரும்பும் சமயத்தில் எதிர்பாராத விதமாக மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் இருந்த இரும்பு கம்பி ஒன்று கீழே இருந்த தடுப்பு வேலி மீது விழுந்தது. அதிக எடை கொண்ட கம்பி என்பதால், தடுப்பு வேலியுடன் இரும்பு கம்பியும் சேர்ந்து மாநகர பேருந்தின் மீது சாய்ந்த தில் பேருந்தின் முன் பக்கம் முழுவதுமாக சேத மடைந்தது. கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்தது. கடைசி நிறுத்தம் என்பதால் பேருந்தில் குறைவான பயணிகளே இருந்தனர். இதனால் விபத்தின் போது பயணிகள் வேகமாக பேருந்தில் இருந்து இறங்கினர். இதையடுத்து, ஓட்டுநர் பேருந்தில் இருந்து வெளியே குதித்து தப்பினார். சென்னை வண்ணா ரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு குறைபாடுகளால் இது போன்ற விபத்துகளும், போக்குவரத்துக்கு நெரிசல்களும் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி பொது மக்கள் புகார் தெரி வித்துள்ளனர்.