சுதந்திரப் போராட்ட வீரரும் காஞ்சிபுரத்தின் முதல் கம்யூனிஸ்டும் காமாட்சியம்மன் பட்டுக் கூட்டுறவு சங்கத்தின் ஸ்தாபகருமான தோழர் கே.எஸ். பார்த்தசாரதியின் 29ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெருவில் உள்ள அவரது இல்லமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு நகரக் குழு உறுப்பினர் சீதாராமன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் நகரக் குழு செயலாளர் சி.சங்கர், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.வாசுதேவன், கே.ஜீவா, மகேந்திரன் ,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு, மூத்த தோழர் நாகையா உட்பட பலர் கலந்து கொண்டு கே.எஸ்.பார்த்தசாரதியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.