tamilnadu

மருத்துவ கலந்தாய்வு: மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை....

சென்னை:
மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

2020-21ஆம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புக்கான தரவரிசை வெளியிடப்பட்டதை தொடர்ந்து கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கின. அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேர இருக்கும் அனைத்து பிரிவு 951 மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு  புதன்கிழமை (நவ.18) தொடங்கியது. இந்த கலந்தாய்வு நவம்பர் 20 வெள்ளிக் கிழமை வரை நடைபெறுகிறது.சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் புதனன்று கலந்தாய்வு தொடங்கியது. தினந்தோறும் 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.மொத்தம் 34,424 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 3,650 மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. மாணவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணையை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.இதனால் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

;