tamilnadu

img

ஆன்லைன் ரம்மி விளையாடி மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் தனுஷ் (23). ஆவடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.  இழந்த பணத்தை மீண்டும் பெறுவதற்காகத் தொடர்ந்து விளையாடிய தனுஷ், தந்தையிடம் ரூ.24,000 பணம் கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை எனக் கூறிய அவரது தந்தை, வெறும் ரூ.4,000 கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ரூ.4,000 பணத்துடன் அறையின் உள்ளே சென்ற தனுஷ் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. பின்னர் தனுஷின் தங்கை கதவைத் தட்டியும் கதவு திறக்கவில்லை. அருகிலிருந்தவர்கள் உதவியுடன் கதவை திறக்க முயர்ச்சித்தும் முடியாததால் சந்தேகமடைந்த அவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே  பார்த்தபோது தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தனுஷின் செல்போனைக் கைப்பற்றி காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

;