tamilnadu

சென்னை, கடலூர் முக்கிய செய்திகள்

வங்கிக்கு செல்லாமல் ஆதார் எண் மூலம் பணப் பரிவர்த்தனை

சென்னை, செப்.3- வங்கிக்கு செல்லாமலும் பாஸ்புக் மற்றும் ஏ.டி.எம்.  அட்டை இல்லாமலும் ஆதார் எண்ணைக் கொண்டு  பணப் பரிவர்த்தனை செய்யும் புதிய திட்டம் அஞ்சல்துறை சார்பில் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  நாட்டின் ஒவ்வொரு பகுதிக்குமான தகவல்  தொடர்பு ஆதாரமாக விளங்கி வந்த அஞ்சல்துறை யின் முக்கியத்துவம், செல் போன்கள், இ மெயில், கூரியர் நிறுவனங்கள் ஆகியவற்றால் குறைந்து விட்டது. இதையடுத்து வங்கிச் சேவையில் கள மிறங்கிய அஞ்சல் துறை அதில் பல புதிய திட்டங் களை அறிமுகப்படுத்தி வருகிறது. நாட்டில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஏராள மாக இருந்தாலும், குக்கிராமங்களில் வசிக்கும் மக்க ளுக்கு வங்கிச் சேவை எட்டாக் கனியாகவே உள்ளது.  அவர்கள் நகர வங்கிகளுக்கு வரவேண்டிய நிலையை  மாற்றி வங்கி சேவையை எளிமைப்படுத்தும் வகை யில் “இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி” திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 121 தபால் நிலை யங்கள் வங்கி சேவை மையங்களாக மாற்றப்  பட்டுள்ளன. இவற்றில் 8 ஆயிரத்து 580க்கும் மேற் பட்டவை கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ளன. வங்கி பரிவர்த்தனையை மேலும் எளிதாக்கும் வகையில் ஆதார் எண் மூலம் பணம் எடுக்கும் aadhar  enabled payment service என்ற புதிய திட்டம் அஞ்  சல்துறை சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் வங்கிக்கு செல்லாமல், வங்கி பாஸ் புக் அல்லது ஏ.டி.எம்.கார்டு இல்லாமல் பண  பரிவர்த்தனை செய்யமுடியும். குறைந்தபட்சம் 100 ரூபா யில் இருந்து அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம். அதற்கு வாடிக்கையாளரின் வங்கி  கணக்கு ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பணம் செலுத்துதல், இருப்புத் தொகை தெரிந்து கொள்ளுதல், மினி ஸ்டேட்மெண்ட் பெறுதல் உள்ளிட்ட  வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

ரூ.100 கோடியில் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம்: மக்கள் வரவேற்பு

கடலூர், செப். 3- கடலூர் முதுநகர் மீன்பிடி துறை முகம் ரூ.100 கோடியில் புதுப்பிப்ப தற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. கடலூர் முதுநகரில் அமைந்துள்ள துறைமுகம் தற்போது மீன்பிடித் தொழி லுக்கு மட்டுமே பயன்பட்டு வருவதால்  இந்த துறைமுகத்தை மீன்பிடித் துறை முகமாக மாற்றி அதனை புதுப்பிக்கும்  வகையில் அரசு நடவடிக்கை எடுத்து  வருகிறது. இந்த துறைமுகத்திலிருந்து தினமும் 245 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகள், 1,555 சாதாரண மீன் பிடி படகுகள் கடலுக்குள் செல்கின்றன. ஆனால், 600 படகுகளை மட்டுமே மீன்பிடித் தளத்தில் நிறுத்த முடியும் என்பதால் மற்றவை அருகிலுள்ள ஆற்றின் முகத்துவாரங்களில் நிறுத்தி வைக்கப்படுகிறது. போதுமான இட வசதி இன்மை, வலை பழுதுபார்க்கும் வசதியில்லாமை, படகுகளை சரி செய்ய  வசதியில்லாமை, பேரிடர் காலங்களில் பாதுகாப்பான இடத்தில் படகுகளை நிறுத்தும் வசதியில்லாமல் இருந்து வரு வதால் அனைத்து வசதிகளுடன் கூடிய மீன்பிடித் தளமாக இதனை மாற்ற வேண்டுமென மீனவர் அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு டிஎச்ஐ என்ற தனியார் நிறுவனத்தை மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஆய்வு நடத்திட அணுகியது. அந்த நிறுவனம் ஆய்வு செய்து அதன் அறிக்கையை தமிழக அரசுக்கு வழங்கியது. அதில், ரூ.100 கோடியில் இந்த துறை முகத்தை விரிவுப்படுத்தலாம் என்றும் அதில், கூடுதலாக 150 இயந்திர படகு கள் நிறுத்த முடியும். இதற்காக கெடிலம்  ஆற்றின் கரையில் 1 கி.மீ தூரத்திற்கு படகு அணையும் சுவர் கட்டுதல், மீன்  வலை பழுது பார்த்தல் தளம், பழு தாகும் படகுகளை உடனுக்குடன் சரி செய்ய தனியாக தளம், மீன்களை இறக்குவதற்கும், விற்பனை செய்வ தற்கும் தனி இடம், சுகாதாரமான முறை யில் கையாளும் வகையில் கழிவுநீர்  வாய்க்கால், கழிப்பறை வசதிகள் அமைக்கப்படுமென இதில் தெரி விக்கப்பட்டது.  இதற்காக, 2015 ஆம் ஆண்டில் மீனவப் பிரதிநிதிகள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட் டத்தையும் நடத்த வேண்டுமென வலி யுறுத்தப் பட்டதன் அடிப்படையில், அதற்கான கூட்டம் நடத்தி அதன் விப ரங்களை தெரிவிக்க மாநில சுற்றுச்சூழல்  தாக்கீட்டு மதிப்புக்குழு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரி யம், மீன்வளத்துறை, மாவட்ட நிர்வாகம்  ஆகியவை சார்பில் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் தொடர்பான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவ லர் இரா.ராஜகிருபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் பிரகாஷ், மீன்வளத்துறை உதவி  இயக்குநர் பி.ரம்யாலட்சுமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மீன்வளத்  துறை அலுவலர் திருஅருள், இத்திட்டம்  செயல்படுத்தப்படுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணொலி காட்சி மூலமாக விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து, பொதுமக் கள் கருத்து தெரிவிப்பதற்கு வாய்ப்பு  வழங்கப்பட்டது. இதில், பேசியவர்க ளில் பெரும்பாலான வர்கள் இத்திட் டத்தை வரவேற்றனர்.  மீனவர் விடுதலை வேங்கை நிர்வாகி  திருமுகம், அனைத்து பொதுநல சங்கங்  களின் கூட்டமைப்பு நிர்வாகி எம்.சேகர்,  மீனவர் வாழ்வுரிமை இயக்கத் தலை வர் பெரு.ஏகாம்பரம், தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் கஜேந்திரன் உள்ளிட்டோர் இத்திட்டத்தை வர வேற்றபோதிலும் சாகர்மாலா திட்டத் தின் கீழ் இதனை இணைப்பதோ, தனி யாருக்கு துறைமுகத்தை தாரை வார்ப்  பதையோ? ஏற்க முடியாது என்றனர்.  துறைமுகம் விரிவாக்கத்திற்காக மீனவ கிராமங்களை அப்புறப்படுத்தும்  முயற்சியில் ஈடுபடக் கூடாது, மீனவர்க ளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடாது, மீனவர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதிப்படுத்த வேண்டும், மீனவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வரும் வகையில் இருக்க வேண்டும். இத்திட்டத்திற்கான நிதி ரூ.100 கோடி போதுமானதல்ல, எனவே, கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.  மத்திய அரசு உதவி இத்திட்டத்தை மத்திய அரசு, மீன்பிடிப்பதற்கான கட்டமைப்பை உரு வாக்கும் நிதியின் கீழ் பெறுவதற்கு மாநில அரசு பரிந்துரை வழங்கியுள்ளது. இதற்கான ஒப்புதல் விரைவில் அளிக் கப்பட்டு நிதி பெறப்படும் என்றும் அத னைத் தொடர்ந்து பணிகள் நடை பெறும் என்றும் கூட்டத்தில் தெரி விக்கப்பட்டது.