8 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை - இடையூறு செய்ததாக அதிமுக எம்எல்ஏக்கள் கைது
கோயம்புத்தூர், செப்.13- தனக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கி எல்இடி பல்பு வாங்கியதில் ரூ.500 கோடி அரசிற்கு இழப்பு ஏற்படுத்திய புகா ரின் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய அதிமுக சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் செவ்வாயன்று சோதனை மேற்கொண்டனர். அவர்களின் சோதனைக்கு இடையூறு ஏற் படுத்தியதாக அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த வர் எஸ்.பி.வேலுமணி. அச்சமயத்தில், தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற் றும் திட்டத்தில் ஒப்பந்தப் பணிகள் மேற்கொள் ளப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக அப்பாவு புகார் அளித்து இருந் தார். எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறு வனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதன் மூலம் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதன் அடிப்படையில் செவ்வாயன்று கோவையில் 9 இடங்கள் உட்பட தமிழக முழுவதும் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையை மேற்கொண்டனர். கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லம், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் மற்றும் கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திரபிர காஷ் அலுவலகம் உட்பட ஒன்பது இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், எல்.இ.டி பல்புகள் கொள்முதல் செய்யப்பட்ட இடங்களி லும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது. கோவையில் குனியமுத்தூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லத்தில் சோதனை நடத்தப்படுவதை அறிந்த ஏராளமான தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பாக குவிந்தனர். அதிமுக தொண் டர்கள் வேலுமணியின் இல்லம் முன்பாக குவிவதை தடுக்க தடுப்புகள் ஏற்படுத்தப்பட் டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை யினருடன் அதிமுக தொண்டர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இடை யூறாக இருக்கக் கூடாது என அவர்களை கலைந்து போக காவல்துறையினர் அறி வுறுத்தினர். ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதி முகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனை அடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், அருண் குமார், அமல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி, தாமோதரன், ஜெயராம், ஏ.கே.செல்வராஜ் ஆகிய ஏழு சட்டமன்ற உறுப்பினர்களையும் 250க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர் களையும் காவல்துறையினர் கைது செய்த னர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் முழக்கம் எழுப்பினர். கைதா காமல் தப்ப முயன்ற அதிமுக தொண்டர்களை காவல்துறையினர் விரட்டி விரட்டி கைது செய்தனர்.முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டின் அருகில் உள்ள மற்ற வீடுகளிலும், கடைகளிலும் ஒளிந்து கொண்ட அதிமுக தொண்டர்களை போலீசார் தேடி தேடி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். ஏற்கனவே இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் இல்லத்தில் சோதனை நடத்தி யிருந்த நிலையில் தற்போது மூன்றாவது முறை யாக சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.