கும்மிடிப்பூண்டியை அடுத்த மேல்முதலம்பேட்டில் தூய்மை பணியாளர் மஞ்சுளா (46) என்பவரது வீடு சனிக்கிழமையன்று (மே 30) நள்ளிரவு தீ பிடித்து எரிந்து நாசமானது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. இந்த தீவிபத்து தொடர்பாக கவரைப்பேட்டை காவல் நிலையத்திற்கு வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.