tamilnadu

img

ஆளுநருக்கு எதிராக போராட்டம் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராடும் என அக்கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி  தமிழக மக்களுக்கு மட்டும்  விரோதி அல்ல. அரச மைப்புச் சட்டத்திற்கும் இந்தி யாவின் பன்முகத் தன்மைக் கும் விரோதமாக செயல் பட்டு வருகிறார்.  அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தைச் சீர்குலைக்க முயற் சித்து வருவதை அனுமதிக்க முடி யாது. வகுப்புவாத அடிப்படையில் மக்க ளைப் பிளவுப்படுத்து கிற கருத்துக்கள் கூறுவதை இனியும் நிறுத்தவில்லை யெனில் அவருக்கு எதிரா கக் கடுமையான போராட் டத்தை நடத்த வேண்டி நிலை ஏற்படும் என எச்சரிக் கிறேன். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.