tamilnadu

img

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்....

சென்னை:
அரசு பள்ளிகளில் பயின்றுதற்போது 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பில் சேரக்கூடிய மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை உடனடியாக செலுத்தும் வகையில், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அந்த நிதியில்இருந்து மாணவர்களுக் கான கல்வி கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றை கல்லூரி நிர்வாகத் திற்கே நேரடியாக செலுத்தமுதலமைச்சர் உத்தரவிட் டுள்ளார்.

இந்த ஆண்டு 7.5 சதவீதஇட ஒதுக்கீட்டின் கீழ், 313 எம்.பி.பி.எஸ். இடங்களிலும், 92 பி.டி.எஸ். இடங்களிலும் அரசு பள்ளி மாணவர் களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் தனியார் பள்ளிகளில் இடம் கிடைத்து, கல்விகட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள அரசுபள்ளி மாணவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு,அவர்களுக்கான கல்வி உதவித்தொகை கிடைப்பதற்கு முன்பாக, அரசே அந்த கல்விகட்டணத்தை ஏற்க உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்களுக்கு முழு அரசு உதவி கிடைக் கும் என தெரிந்த பின்பும் திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது அரசியல் நாடகம் என்றும், திமுகவின் அரசியல் நாடகத்தை மக்கள் நன்குஅறிவார்கள் என்றும் விமர் சித்துள்ளார்.

;