சென்னை, ஏப். 3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 6-10 தேதிகளில் கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் ஒருபகுதியாக 9ஆம் தேதி மத்திய மாநில உறவுகள் மாநில உரிமைகள் தொடர்பான சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பேசுகின்றனர்.
இதனையொட்டி ஞாயிறன்று (ஏப்.3) சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். பாலகிருஷ்ணன் ஆகியோர் அழைப்பிதழ் வழங்கினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.ராதாகிருஷ்ணன், "அழைப்பிதழை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மாநாட்டு கருத்தரங்கில் நேரடியாக கலந்து கொள்வதாக உறுதி அளித்தார்" என்றார்.