tamilnadu

வேலைவாய்ப்புகள் கிடைக்கும் முதலீட்டாளர்கள் உறுதி

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 11 நிறுவனங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. 

அந்த ஒப்பந்தங்களின்படி தமிழ்நாட்டில் முதலீடு செய்வதாக ஒப்புக் கொண்டுள்ள நிறுவனங்களின் விபரம் வருமாறு:

n    தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமாக பங்கேற்றிருக்கும் தொழிலதிபர்கள், பிரதிநிதிகள் முன்னிலையில், காணொலி மூலம் உரையாற்றிய இந்தியாவின் முன்னணி
நிறுவனமான ரிலையன்ஸ்-ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ரூ.35 ஆயிரம் கோடி முதலீட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலையை துவங்குவதாக அறிவித்தார்.

n கோத்ரேஜ் நிறுவனம் சென்னை அருகே செங்கல்பட்டில் ரூ.515 கோடி முதலீட்டில் தனது உற்பத்தி மையத்தை நிறுவுகிறது. இதன் மூலம் 446 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

n டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செல்போன் உற்பத்தி மையம் ஒன்றை ரூ. 12 ஆயிரத்து 82 கோடி முதலீட்டில் கிருஷ்ணகிரியில் அமைக்கிறது.இதன் மூலம் 40 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

n செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பெக்ரான் நிறுவனம் நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையத்தையும் வே.எஸ். டபிள்யூ நிறுவனம் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் 6,600 நபர்களுக்கு வேலை கொடுக்கும் வகையில் ரூ.12 ஆயிரம் கோடியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை துவங்குகிறது.

n தமிழ்நாடு முழுமைக்குமாக டி.வி.எஸ். குழுமம் ரூ.5 ஆயிரம் கோடியில் தொழில் நிறுவனத்தையும், மிட்சுபிஷி நிறுவனம் ரூ.200 கோடிக்கு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மோட்டார் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது.

n வியட்நாம் நாட்டின் முன்னணி மின் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைக்கிறது. ஹூண்டாய் தொழிற்சாலை நிறுவனம் ரூ.6 ஆயிரம்கோடி செலவில் காஞ்சிபுரத்தில் பெட்ரோலிய மின்சார வாகன கார் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்குகிறது.

n குவால்காம் நிறுவனம்-ரூ.177.27 கோடி முதலீடு செய்துள்ளது. முதல் நாளில் மட்டும் ரூ.86,174 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.